மணப்பாறை, திருச்சி மாவட்டம் மணப்பாறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிதியளிப்பு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மணப்பாறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதியளிப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பெரியார் சிலை திடலில் நடைபெற்றது. கட்சியின் வட்டச்செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், யு.நஸ்ரின்பானு, வி.சீனிவாசன், ஆர்.சுரேஷ், எஸ்.சேதுராமன், எம்.பிச்சைக்கண்ணு, சி.அய்யாவு, பி.கணபதி, கே.நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநிலச் செயலாளர் பி.சண்முகம், மாநில குழு உறுப்பினர் எம்.ஜெயசீலன், மாவட்ட செயலாளர் கே.சிவராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் வி.சிதம்பரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பி.சண்முகம், வருமான வரி உச்ச வரம்பு உயர்வு என்பது ஏமாற்று வேலை, வரபோகின்ற டில்லி உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல், மற்றும் இடைத்தேர்தல்களில் நடுத்தர மக்களின் வாக்குகளை பெறும் உள்நோக்கம் கொண்டவை, மத்திய அரசின் அனு மின்சாரம் அன்னிய கம்பேனிகள் அனுமதி என்பது ஆபத்தான முடிவு, காப்பீட்டுத்துறையில் 100 சதவீத அன்னிய கம்பேனிகள் அனுமதி என்பது எல்.ஐ.சியை அழித்தொழிப்பதும், பாதுக்காப்பற்ற நிலைக்கு இந்திய மக்கள் தள்ளப்படுதாகவும் பேசினார். நிகழ்ச்சியில் ரூ.3 லட்சம் நிதியை மாநிலச் செயலாளரிடம் கட்சியினர் வழங்கினர். வரவேற்புரை மாவட்ட குழு உறுப்பினர் எம்.கண்ணன், நன்றியுரை வட்டக்குள் உறுப்பினர் பி.பெரியசாமி ஆகியோர் கூறினர்.
