அஞ்சல்துறையில் 21,413 கிராம அஞ்சல் பணியாளர்கள் (GRAMIN DAK SEVAKS -GDS) புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Dragon Fruit: லட்சங்களில் லாபம்… தண்ணியில்லன்னாலும் தப்பிச்சு வளரும் டிராகன்… மாத்தி யோசித்த விவசாயி…
வயதுத் தகுதி: 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பள விபரம்: தபால் அலுவலர் (BPM) பணிக்கு ரூ.12,000 – 29,380, உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) பணிக்கு ரூ.10,000 – 24,470 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப விபரம்: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக 03.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் 06.03.2025 முதல் 10.03.2025 வரை மாற்றம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Chicken: சிக்கன் சாப்பிட்டா சிக்கலா… கோழிகளுக்கு பரவும் புது வைரஸால் மக்கள் பீதி…
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவுக்கு ரூ.100, SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஆவணங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், விண்ணப்பிக்கும் நபரின் கையெழுத்து, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகும்.
Step 1: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்க்கு சென்று Registration என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
Step 2: அதன் தொடர்ச்சியாக விவரங்களைச் சேகரிக்கும் பக்கம் திரையில் தோன்றும். அதில் உங்களுடைய கட்டாய விவரங்கள் உள்ளிட வேண்டும். முதலில் உங்களுக்கு என்று தனித்துவமான போன் நம்பர் வேண்டும். அதனைத் தொடர்ந்து, ஒரு தனித்துவ இமெயில் வேண்டும். பின்னர் விண்ணப்பதாரின் பெயர் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் இருப்பது போலவே இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: பள்ளியில் கல்வி மட்டுமல்ல கழனியும் சேர்த்து கற்றோம்… அசத்தும் கஞ்சிக்குழி அரசுப்பள்ளி…
அதனைத்தொடர்ந்து, அப்பா பெயர், பிறந்த நாள், பாலினம், சாதி, 10ஆம் வகுப்பு எந்த வட்டாரத்தில் தேர்ச்சி பெற்றீர்கள், தேர்ச்சி பெற்ற வருடம் போன்றவை இடம்பெற வேண்டும். போன் நம்பர் மற்றும் இமெயிலை சரிபார்க்க validate என்ற ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்து தரவுகளை உறுதி செய்ய வேண்டும். கடைசியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளை அதில் உள்ளது போலவே உள்ளிட்டு Submit செய்யவும்.
Step 3: அடுத்த கட்டமாக, ஆதார் எண் மற்றும் இதர விவரங்களை உள்ளிடுவதற்கான பக்கம் தரையில் தோன்றும். அதில் ஆதார் எண், மாற்று திறனாளியாக இருந்தால் அதற்கான குறிப்பு, 10ஆம் வகுப்பில் படித்த மொழி, ஏற்கனவே வேலையில் உள்ளவரா? அப்படி என்றால், தடையின்மை சான்றிதழ் (NOC) உள்ளதா போன்ற கேள்விகள் இடம்பெறும். அதற்குத் தகுந்த பதில்கள் அளித்து, புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்ற வேண்டும். புகைப்படத்தில் அளவு 50 KB கீழ் இருக்க வேண்டும், கையொப்பத்தின் அளவு 20 KB கீழ் இருக்க வேண்டும்.
Step 4: அதன் பின்னர் நீங்கள் உள்ளீடு செய்த விவரங்கள் திரையில் தோற்றும். உங்களின் விவரங்களைச் சரிபார்த்துக் கொண்டு கீழ் உள்ள Box யை கிளிக் செய்து Submit கொடுக்கவும்.
இதையும் படிங்க: Tiruchendur Murugan Temple: திருச்செந்தூரில் கொள்ளை போன சிலை… கனவில் வந்த முருகன்… சண்முகருக்கு 370வது ஆண்டு விழா…
Step 5: ஆன்லைன் விண்ணப்படிவம் திரையில் தோன்றும். அதில் உங்களின் பெயர், அப்பா பெயர், பாலினம், பதிவு எண், பிறந்த நாள் மற்றும் சாதி ஏற்கனவே இடம்பெற்று இருக்கும். அதன் கீழ் உங்களில் வீட்டு முகவரி தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். வீட்டு முகவரியைப் பொறுத்தவரைக் கதவு எண், தெரு பெயர், பகுதி, மாவட்டம் மற்றும் அஞ்சல் குறியீடு போன்றவற்றை உள்ளிட வேண்டும்.
நிரந்தர முகவரிக்கும் அதையே கொண்டு பூர்த்தி செய்யலாம். தொடர்ந்து, அதன் கீழ் கல்வித்தகுதி பற்றிய விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். எந்த போர்டில் படித்தீர்கள் என்ற இடத்தில் தமிழ்நாடு State Board of School Examination என்ற option தேர்வு செய்யவும். Result type இல் Marks என்று பதிவிடவும். அதனைத் தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களைப் பதிவிடுவதற்கான கட்டங்கள் திறக்கும். அதில் நீங்கள் எடுத்த மதிப்பெண்களைச் சரியாகப் பதிவிடவும். மொழி தேர்வில் தமிழ் மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் save and continue என்ற இடத்தை கிளிக் செய்யவும்.
Step 6: எந்த பகுதியில் உங்களுக்கு வேலை வேண்டும் என்று தேர்வு செய்வதற்கான பக்கம் திரையில் தோன்றும் . அதில் Circle தமிழ்நாடு என்றும் Division applying for என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்ற பகுதியை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் உள்ளீடு செய்த முகவரியில் அடிப்படையில் Divisions உங்களுக்குக் காண்பிக்கப்படும்.
இதையும் படிங்க: Artichoke Soup: இதய பிரச்சினையை விரட்டும் சூப்… ஆர்டிசோக் பயன்கள் தெரியுமா…
Step 7: நீங்கள் தேர்வு செய்யும் பகுதியைப் பொருத்து பணியிடம் காலியாக உள்ள தபால் நிலையங்களின் பட்டியல் காட்டும். அதில் நீங்கள் விருப்பப்படும் இடத்தை தேர்வு செய்துகொள்ளலாம்.
குறைந்தது 5 இடங்கள் தேர்வு செய்யலாம். அதனைத்தொடர்ந்து, கீழே உள்ள Box யை கிளிக் செய்து save and Proceed கொடுக்க வேண்டும். ஸ்டெப் தற்போது முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதனை Print கொடுத்து எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
February 11, 2025 10:18 PM IST
