Last Updated:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு  மீனாட்சி அம்மன் தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார்.

X

மதுரை

மதுரை மீனாட்சி

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் மாதம் தோறும் விசேஷமான திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், தை மாதத்தை முன்னிட்டு தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.இத்திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் ஆகியோர் தினமும் மாலை நேரத்தில் அன்ன வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், சேஷ வாகனம், தங்க குதிரை வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளை சுற்றி மக்களுக்கு அருள்பாளிப்பர்.

இதனை அடுத்து இத்திருவிழாவின் ஐந்தாவது நாளில் சுமார் ஏழு முப்பது மணி அளவில் மீனாட்சியம்மன் கோவிலின் பார்வதி யானை முன் செல்ல சிவாச்சாரியாரின் மேளதாளங்களுடன் ஜொலிக்கும் தங்க குதிரையில் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி முன் சென்றனர். அதனைத் தொடர்ந்து மதுரையை ஆளக்கூடிய மீனாட்சி ஜொலிக்கும் தங்க குதிரையில் தங்க ஆபரணம் மற்றும் மாலைகள் அணிந்து அம்மன் சன்னதியில் இருந்து புறப்பாடாகி சித்திரை வீதி முழுவதும் சுற்றி வலம் வந்தனர். ஜொலிக்கும் தங்க குதிரையில் மதுரை மீனாட்சியை காண்பதற்கு என்று வெளிநாட்டவர் முதற்கொண்டு திரளான பொதுமக்கள் காத்திருந்து மீனாட்சியை தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க


நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *