Last Updated:
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் B.sc Nursing முடித்த 23-45 வயது செவிலியர்கள் தேவை. www.omcmanpower.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். 03/11/2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய விருப்பம் உள்ள செவிலியர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
பூட்டான் சுகாதார அமைச்சக மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் B.sc Nursing – யில் தேர்ச்சி பெற்று 23 முதல் 45 வயதிற்குட்பட்ட ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
மேற்படி, 2 முதல் 5 வருட பணி அனுபவமுள்ள பணியாளர்களுக்கு ரூ.65,000/- ஊதியமாகவும், 6 முதல் 10 வருட பணி அனுபவமுள்ளவர்களுக்கு 73,000/- ஊதியமாகவும், 10 வருடத்திற்கு மேல் பணி அனுபவமுள்ளவர்களுக்கு ரூ.86,000/- ஊதியமாகவும் வழங்கப்படும்.
இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in – ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
October 30, 2025 6:43 PM IST

